சனி, 3 ஏப்ரல், 2010

இந்துக்கோயில் அழிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு பாகிஸ்தான் இந்து அமைப்பு மறுப்பு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள கிருஷ்ணன் கோயில் அழிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் இந்து அமைப்பு மறுத்துள்ளது.
இங்குள்ள கோயில்களைச் சூழவுள்ள நிலம் தொடர்பில் பிரச்சினையிருப்பதாகத் தெரிவித்துள்ள இவ்வமைப்பு ஆனால், எந்தவொரு கோயிலும் அழிக்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளது.
எம்.ஏ.ஜின்னா வீதியில் அமைந்துள்ள நாராயண சுவாமி கோயில் உள்ளிட்ட சில கோயில்களின் நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இந்து சபையின் போஷகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கராச்சியிலுள்ள கிருஷ்ணன் கோயில் அழிக்கப்பட்டதாகவும் அக்கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் சிந்து மாகாணத்தின் தேசியக் கட்சியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திச் சேவையொன்று நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தமக்குத் தெரிய வந்திருக்கும் எனவும் அவ்வாறு நடைபெற்றிருந்தால் தாம் அமைதியாக இருந்திருக்கப் போவதில்லையெனவும் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால், 150 வருடங்கள் பழைமை வாய்ந்த நாராயணன் சுவாமி கோயிலின் ஒரு பகுதி நிலம் வாகனத் தரிப்பிடத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குமார் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக