|
செவ்வாய், 21 ஜூலை, 2009
முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் ஆயுதக் கையளிப்பு: ஏழு துப்பாக்கிகள் இன்று ஒப்படைப்பு
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம்!
ஜூலை 22 அன்றைய சூரிய கிரகணத்தை இந்தியா, ஜப்பானின் சில பகுதிகள், சீனா ஆகிய நாடுகளில் பார்க்க முடியும். இந்தியாவின் மேற்குப் பகுதியில் சூரியோதயத்துடன் தொடங்கும் இந்தச் சூரிய கிரகணம், இந்தியாவின் கிழக்குப் பகுதி வழியாக அப்படியே மியான்மர், ஜப்பானிய தீவுகள் மற்றும் சீனாவைக் கடந்து செல்லும்.
இந்திய நேரப்படி ஜூலை 22 அன்று அதிகாலை 5.28 சந்திரனின் நிழல் பூமியைத் தொடும் போது தொடங்கி காலை 10.42 மணிக்கு சந்திரனின் நிழல் பூமியை விட்டு விலகும் போது இந்தச் சூரிய கிரகணம் முடிவடைகிறது. முழு சூரிய கிரகணத்தின் மேற்கு பகுதியில் சூரத், இந்தூர், போபால், ஜபல்பூர், வாரணாசி மற்றும் பாட்னா போன்ற இந்திய நகரங்கள் மிக அருகில் உள்ளதால், இதனை நன்கு பார்க்க முடியும்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு பாட்னாவுக்கு அருகேவுள்ள தெரகானா என்ற இடம்தான் மிகச் சிறந்த இடம் என்று தெரிவித்துள்ளது. முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் இங்கே நேர் செங்குத்தாக சுமார் 15 டிகிரியில் இருப்பதே இதற்கு காரணமாகும். இதன் மூலம் இங்கு முழு சூரிய கிரகணத்தை நன்கு பார்க்க முடியும்.
ஒரே மாதத்தில் நிகழும் மூன்று கிரகணங்களின் வரிசையில் இந்த சூரிய கிரகணம் இரண்டாவதாகும். முதலாவதாக ஜூலை 7ஆம் தேதி சந்திர கிரகணமும், ஜூலை 22 அன்று சூரிய கிரகணமும், ஆகஸ்டு 6ஆம் தேதி மீண்டும் ஒரு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம் எப்படி நிகழ்கிறது?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சந்திரனின் நிழலால் சூரியன் முழுமையாகவோ, பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. இதுவே கிரகணமாகும். கிரகணத்தின் போது சூரியனின் ஒளி இல்லாமல் இருட்டாகி விடுவதால் வானில் உள்ள நட்சத்திரங்கள் பிரகாசமாக தெரிவதுடன் சந்திரனைச் சுற்றி ஜொலிக்கும் ஒளி வட்டம் தோன்றுவது அற்புதமான காட்சியாகும்.
இதுபோன்ற காட்சி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது அமாவாசையின் போது மட்டுமே தோன்றும். பூமியின் பரப்பின் மீது சந்திரனின் நிழல் விழும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்படுகிறது. அப்படியானால் ஒவ்வொரு 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை வரும் போதும் சூரிய கிரகணம் ஏற்படுமா என்ற கேள்வி எழும்.
ஆனால் அவ்வாறு நிகழாது. ஏனென்றால் பூமியைச் சுற்றிய சந்திரனின் சுற்று வட்டப் பாதையானது சூரியனைச் சுற்றிய பூமியின் சுற்று வட்டப் பாதைக்கு 5 டிகிரி சாய்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு அமாவாசையின் போதும் சந்திரனின் நிழல் விழுவதில்லை. ஆனால் வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறை சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும்படி நேர் கோட்டில் அமைந்து சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
நாளை புதன்கிழமை 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம்
| நாளை சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்தக் கிரகணம் 5 மணி 14 நிமிடங்களுக்கு நீடிக்கப்போகிறது. இலங்கையில் காலை 6.21 மணிக்கு உச்சகட்டமாக இருக்கும். அப்போது சூரியனின் 40 வீதத்தை சந்திரன் மறைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். இதுவே இந்த 21 நூற்றாண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணமாக இருக்கும். அதிகாலை 05.28 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், காலை 10 மணி 42 நிமிடங்கள் வரை நீடிக்கும். நாளை காலை நிகழவிருக்கும் சூரியகிரகணத்தை இலங்கை, இந்தியா, நேபால், பங்ளாதேஷ், பூட்டான், மியன்மார், சீனா உட்பட பல நாடுகளில் காணக்கூடியதாக இருக்கும். |
அகதிச் சிறுமிக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு,வன்னித் தளபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
| இந்தக் குடும்பத்தவர்கள் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஷிராணி பண்டாரநாயக்கா, சலீம் மர்க், ஜகத் பால பட்டபெந்தி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் விடுத்தது. பிரித்து வெவ்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் குடும்பத்தின் ஆறு உறுப்பினர்களையும் அவர்கள் சார்பாக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவைப் பரிசீலித்தமையை அடுத்து ஒரே முகாமுக்கு உடனடியாக மாற்ற நீதிமன்றம் பணித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்தக் குடும்பத்தவர்களில் காயமுற்ற நிலையில் இருக்கும் சிறுமி சோபிகாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் அவ்விடயம் இழுபறிப்படுவதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார். இதனையடுத்து அச்சிறுமியை உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வன்னி இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி றியாஸ் ஹம்ஸா, நேற்றுவரை இந்த முகாம்களில் இருந்து வயதானோர் 7 ஆயிரத்து 400 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என மன்றுக்குத் தெரிவித்தார். வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் குழுக்களை உடனடியாக அரசு தடைசெய்ய வேண்டும்
ஹெல உறுமய பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக் குழுக்களாக முஸ்லிம் இளைஞர்கள் இயங் குகின்றனர் என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தவறா னவை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல் லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சிலர் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருந்தனர். அவ்வா றான ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பாதுகாப்புப் படையினர் வேண்டிக் கொண்டனர். இப்போது புலிகளது அச்சுறுத்தல் இல்லை. ஆத லால், அவர்கள் தம்மிடமிருந்த ஆயுதங்களை படையினரிடம் ஒப்படைத்தனர். அரச படையி னர் போதிய பாதுகாப்பை எமக்குத் தருவர் என நாம் நம்பு கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் உத்தரவாதத்தை பாது காப்பு அமைச்சு வழங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்ல, நாட்டின் எந்தப் பிரதே சத்திலும் சட்டவிரோத ஆயுதங்களை யாரும் வைத்திருக்க முடியாது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்த சூழலில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலும் இவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.
கிழக்கில் தற்பாதுகாப்புக்காக அரச படையினரின் ஆதரவோடு அமைக்கப் பட்ட ஊர்காவல்படை அமைப்பையே இப்போது முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் என்று இவர்கள் திரித்துக் கூறுகின்றனர் என ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் கொன்று குவிப்பு! சர்வதேச நெருக்கடியில் சீனா!!
[Photo]
கடந்த மாதம் சீனாவில் ஜின்ஜி யாங் மாகாணத்தில் ஒரு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஹான் சமூகத்திற்கும் லி சீன முஸ்லிம் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சீன முஸ்லிம்கள் (வீகர்கள்) கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு நீதி கேட்டு பெரிய அளவில் முஸ்லிம்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3000 முஸ்லிம் கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அமெரிக்க வாழ் சீன முஸ்லிம்கள் கழகம் மதிப் பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறை கலைந்து செல்ல உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைய மறுத்த போது, அது கலவரமாக வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் 156 பேர் இறந்தனர் என்று ஜிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 184 பேர். அவர்களில் 46 பேர் ஹான் சீனர்கள், 137 பேர் உகர்கள் (முஸ்லிம் கள்) என்பது அரசுத்துறை ஊடகத்தின் கணக்கு.
கலவரத்தைத் தூண்டியவர்கள் என பல நூறு பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் சந்தேகத்திற்குரிய 90 பேரை தேடி வருவதாகவும் காவல்துறை தலைவர் லியூ யோகுவாவை மேற் கோள்காட்டி ஜிங்குவா தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கு அமெரிக்கா வாழ் வீகர் கழகம் கண்டனம் தெரிவித்த தோடு, அக்கழகம் தூண்டுவதாக சீனா வெளியிடும் குற்றச்சாட்டையும் மறுத் துள்ளது. சர்வதேச சமூகம் இக்கொடும் சம்பவத்தை கண்டிக்க வேண்டும் என அக்கழகத்தின் துணைத் தலைவர் அலீம் சீடாப் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
வீகர்களின் சுயாட்சிக்கான போராட்டங்களை சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வந்திருக்கின்றன. இதனால் பலர் வெளியேறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வெளியில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தூண்டுவதாக சீனா குற்றம்சாட்டி வரு கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் வசித்துவரும் ராபியா காதீர், தொலை பேசி மற்றும் வலைதள செய்திகள் மூலமாக தற்போதைய கலவரத்தை தூண்டினார் என்கிறது சீன கம்யூனிஸ அரசு.
ராபியா காதீர் ஜூலை 5ம் தேதி, ஜின்ஜியாங் மக்களுடன் தொலைபேசி யில் உரையாடினார் என்று குற்றம்சாட்டுகிறார் ஜின்ஜியாங் மாகாண ஆளுநர் நூர் பர்க்கி. சீன ஒடுக்குமுறை காரணமாக வெளியேறிய வீகர்கள் ராபியா காதீர் தலைமையில் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது.[Photo]
சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் முஸ் ம்கள். ஆனால் ஜின்ஜியாங்கில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் என்றபோதிலும், தலைநகர் உரூம்கிலில் 90 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்த ஹான் இனத்தவர்கள். தலைநகர் ஜனத்தொகை 20,30,000.
தலைநகர் உரூம்கியில் முஸ்லிம் களுக்கும் ஹான்களுக்கும் நடந்த மோத ல் 156 பேர் கொல்லப்பட்டனர். 828 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இரண்டாவதாக காஷ்கர் நகரத்திலும் கலவரத் தீ மூண்டது. வெளிநாடு வாழ் வீகர்களின் தகவல் தொடர்புகளை துண்டிப்பதற்காக அனைத்து மின் தகவல் இணையங்களையும் சீன அரசு துண்டித்தது. எந்த ஒரு பிரச்சினைக்கும் காதீரை குற்றம்சாட்டுவது சீனாவின் வழக்கம் என்கிறார் அலீம் ஸீடாப்.
கடந்த ஆண்டு திபெத்தில் தலைநகர் லாசாவில் புத்த பிட்சுகள் அமைதியாக பேரணி நடத்தியபோதும், இதுபோல் ஒரு கலவரம் வெடித்தது. அந்த சம்பவத்திற்கு 22 பேர் பலியானார்கள். தலாய்லாமா தான் வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார் என்று சீனா குற்றம்சாட்டியது. அதை அவர் மறுத்தார். மத்திய ஆசியாவின் 8 நாடுகளை எல்லையாகக் கொண்ட ஜின்ஜியாங்கில் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. எனவே சீன பொருளாதாரத்தின் தூணாகவும் ஜின்ஜியாங் விளங்கு கிறது. தற்போது அங்கு விடுதலை விருப்பம் வீகர் மத்தியில் தலைதூக் கியுள்ளது. சமீபத்திய வருடங்களில் வலுக் கட்டாயமாக குடியமர்த் தப்பட்ட ஹான் இனத்தினர், படிப்படியாக வீகர்களை அவர்களது தாய் மண்ணில் இருந்து விரட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வீகர்களின் ஆயுதப் புரட்சி சீனாவுக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா பட்டியல் போட்டது. அப்போது சீனா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜின்ஜியாங் கில் இருந்து செயல்படும் கிழக்கு துருக்கி இஸ்லாமிய இயக்கத்தையும் தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா பட்டியலிட்டது.
அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதப் போருக்கு சீனாவின் ஆதரவைப் பெறவேண்டி அமெரிக்கா இதை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இறங்கியபோது, அங்கு நான்கு வீகர் முஸ்லிம்களை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. பின்னர் அவர்கள் குவாண்டனாமோ தீவு சிறைக்கு அனுப்பப்பட்டனர். அந்த நான்கு வீகர் முஸ்லிம்களையும் எதிரிகள் பட்டியலில் நீட்டிக்க முடியாது என்று கூறிய அமெரிக்க நீதிமன்றம், நான்கு பேரையும் விடுவித்தது. இவர்களை சீனா தீவிரவாதிகள் என்று மீண்டும் கூறி வருகிறது. இவர்கள் கடந்தமாதம் குவாண் டனாமோவில் இருந்து பெர்முடாவுக்கு அனுப்பப்பட்டனர்.
ஜின்ஜியாங்கில் வீகர் முஸ்லிம்கள் நசுக்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அடிப்படை ஆதாரமின்றி சீனாவின் வேண்டு கோளை ஏற்று எந்த இயக்கத்தையும் தடை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத் தியிருக்கிறது. திபெத்தைப் போன்று ஜின்ஜியாங் முஸ் ம்களின் சமய வழிபாட்டு உரிமையும் கடின ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ்.
வீகர்களை பலவீனப்படுத்த சீன அரசு சொந்த செலவில் ஹான்களை அதிகப் படியாக குடியேற்றி வருகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைதியான வழியில் இஸ்லாமிய நெறிகளை பரப்பி வருவோரையும் தீவிரவாதிகள் என சீனா கூறுகிறது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய உலக சூழலை சீனா தோதாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஜின்ஜியாங் முஸ்லிம்கள் வன்முறை, தண்டம், சிறை மற்றும் சித்திரவதைக்கு மத்தி யில்தான் இறைவணக்கத்தில் ஈடுபடுகின்ற னர். திபெத்திலும் இதே நிலைதான் கிழக்குப் பகுதிகளான திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் சீன பகுதியோடு இணைத்துக் கட்ட அதிகப்படியான பொருட்செலவில் ஹானர்களை இரு பகுதிக்குமாக அனுப்பி வைக்கிறது அரசு.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களை கைது செய்கிறது. குர்ஆனின் வசனங்களையும் தணிக்கை செய்கிறது என்றெல்லாம் மனித உரிமை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை 114 பக்கங்களைக் கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று உரூம்கி நகரத்தின் பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. அன்றைய ஜும்மா தொழுகை தடுக்கப் பட்டது. முஸ் ம்கள் தங்கள் வீடுகளில் தொழுதுகொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டனர். உரூம்கியில் 20 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். உரூம்கியின் பெரிய கடை வீதி அருகே உள்ள பள்ளிவாச ல் வாரம்தோறும் 3000 முதல் 5000 பேர் தொழுகைக்கு வருவது வழக்கம்.
ஜிலி8 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சீன அதிபர் ஹீ ஜிண்டாவோ தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். தொலைக் காட்சியில் உரையாற்றிய அதிபர், பிரி வினைவாதிகள்தான் இந்தக் கலவரத் தைத் தூண்டினர் என்றார்.
தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தற்கா க மானதுதான். காரணம் இதற்கு முன்னரும் இதுபோன்ற வீகர் எழுச்சி ஏற்பட்டு பின்னர் அடக்கப்பட்டிருக்கிறது. சோசலிஸம் பற்றி அதிகம் பேசும் கம்யூனிஸ்டு கள் மனித உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் எதிரான அடக்குமுறைகளைக் கையாள் வது வியப்பான விஷயமல்ல. கொள்கை கோட்பாடு எதுவாக இருந்தாலும் அதிகார வர்க்கத்திற்கு ஒரு ஆபத்து ஏற்படும் என்றால் அடக்குமுறை ஏவப்படும். மேற்கு வங்காளத்திலும் இதுதான் நடக்கிறது. கிழக்கு சீனாவிலும் இதுதான் நடக்கிறது.
முஸ்லிம்கள் கொன்று குவிப்பு! சர்வதேச நெருக்கடியில் சீனா!!
[Photo]
கடந்த மாதம் சீனாவில் ஜின்ஜி யாங் மாகாணத்தில் ஒரு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஹான் சமூகத்திற்கும் லி சீன முஸ்லிம் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சீன முஸ்லிம்கள் (வீகர்கள்) கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு நீதி கேட்டு பெரிய அளவில் முஸ்லிம்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3000 முஸ்லிம் கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அமெரிக்க வாழ் சீன முஸ்லிம்கள் கழகம் மதிப் பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறை கலைந்து செல்ல உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைய மறுத்த போது, அது கலவரமாக வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் 156 பேர் இறந்தனர் என்று ஜிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 184 பேர். அவர்களில் 46 பேர் ஹான் சீனர்கள், 137 பேர் உகர்கள் (முஸ்லிம் கள்) என்பது அரசுத்துறை ஊடகத்தின் கணக்கு.
கலவரத்தைத் தூண்டியவர்கள் என பல நூறு பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் சந்தேகத்திற்குரிய 90 பேரை தேடி வருவதாகவும் காவல்துறை தலைவர் லியூ யோகுவாவை மேற் கோள்காட்டி ஜிங்குவா தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கு அமெரிக்கா வாழ் வீகர் கழகம் கண்டனம் தெரிவித்த தோடு, அக்கழகம் தூண்டுவதாக சீனா வெளியிடும் குற்றச்சாட்டையும் மறுத் துள்ளது. சர்வதேச சமூகம் இக்கொடும் சம்பவத்தை கண்டிக்க வேண்டும் என அக்கழகத்தின் துணைத் தலைவர் அலீம் சீடாப் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
வீகர்களின் சுயாட்சிக்கான போராட்டங்களை சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வந்திருக்கின்றன. இதனால் பலர் வெளியேறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வெளியில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தூண்டுவதாக சீனா குற்றம்சாட்டி வரு கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் வசித்துவரும் ராபியா காதீர், தொலை பேசி மற்றும் வலைதள செய்திகள் மூலமாக தற்போதைய கலவரத்தை தூண்டினார் என்கிறது சீன கம்யூனிஸ அரசு.
ராபியா காதீர் ஜூலை 5ம் தேதி, ஜின்ஜியாங் மக்களுடன் தொலைபேசி யில் உரையாடினார் என்று குற்றம்சாட்டுகிறார் ஜின்ஜியாங் மாகாண ஆளுநர் நூர் பர்க்கி. சீன ஒடுக்குமுறை காரணமாக வெளியேறிய வீகர்கள் ராபியா காதீர் தலைமையில் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது.[Photo]
சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் முஸ் ம்கள். ஆனால் ஜின்ஜியாங்கில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் என்றபோதிலும், தலைநகர் உரூம்கிலில் 90 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்த ஹான் இனத்தவர்கள். தலைநகர் ஜனத்தொகை 20,30,000.
தலைநகர் உரூம்கியில் முஸ்லிம் களுக்கும் ஹான்களுக்கும் நடந்த மோத ல் 156 பேர் கொல்லப்பட்டனர். 828 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இரண்டாவதாக காஷ்கர் நகரத்திலும் கலவரத் தீ மூண்டது. வெளிநாடு வாழ் வீகர்களின் தகவல் தொடர்புகளை துண்டிப்பதற்காக அனைத்து மின் தகவல் இணையங்களையும் சீன அரசு துண்டித்தது. எந்த ஒரு பிரச்சினைக்கும் காதீரை குற்றம்சாட்டுவது சீனாவின் வழக்கம் என்கிறார் அலீம் ஸீடாப்.
கடந்த ஆண்டு திபெத்தில் தலைநகர் லாசாவில் புத்த பிட்சுகள் அமைதியாக பேரணி நடத்தியபோதும், இதுபோல் ஒரு கலவரம் வெடித்தது. அந்த சம்பவத்திற்கு 22 பேர் பலியானார்கள். தலாய்லாமா தான் வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார் என்று சீனா குற்றம்சாட்டியது. அதை அவர் மறுத்தார். மத்திய ஆசியாவின் 8 நாடுகளை எல்லையாகக் கொண்ட ஜின்ஜியாங்கில் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. எனவே சீன பொருளாதாரத்தின் தூணாகவும் ஜின்ஜியாங் விளங்கு கிறது. தற்போது அங்கு விடுதலை விருப்பம் வீகர் மத்தியில் தலைதூக் கியுள்ளது. சமீபத்திய வருடங்களில் வலுக் கட்டாயமாக குடியமர்த் தப்பட்ட ஹான் இனத்தினர், படிப்படியாக வீகர்களை அவர்களது தாய் மண்ணில் இருந்து விரட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வீகர்களின் ஆயுதப் புரட்சி சீனாவுக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா பட்டியல் போட்டது. அப்போது சீனா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜின்ஜியாங் கில் இருந்து செயல்படும் கிழக்கு துருக்கி இஸ்லாமிய இயக்கத்தையும் தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா பட்டியலிட்டது.
அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதப் போருக்கு சீனாவின் ஆதரவைப் பெறவேண்டி அமெரிக்கா இதை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இறங்கியபோது, அங்கு நான்கு வீகர் முஸ்லிம்களை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. பின்னர் அவர்கள் குவாண்டனாமோ தீவு சிறைக்கு அனுப்பப்பட்டனர். அந்த நான்கு வீகர் முஸ்லிம்களையும் எதிரிகள் பட்டியலில் நீட்டிக்க முடியாது என்று கூறிய அமெரிக்க நீதிமன்றம், நான்கு பேரையும் விடுவித்தது. இவர்களை சீனா தீவிரவாதிகள் என்று மீண்டும் கூறி வருகிறது. இவர்கள் கடந்தமாதம் குவாண் டனாமோவில் இருந்து பெர்முடாவுக்கு அனுப்பப்பட்டனர்.
ஜின்ஜியாங்கில் வீகர் முஸ்லிம்கள் நசுக்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அடிப்படை ஆதாரமின்றி சீனாவின் வேண்டு கோளை ஏற்று எந்த இயக்கத்தையும் தடை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத் தியிருக்கிறது. திபெத்தைப் போன்று ஜின்ஜியாங் முஸ் ம்களின் சமய வழிபாட்டு உரிமையும் கடின ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ்.
வீகர்களை பலவீனப்படுத்த சீன அரசு சொந்த செலவில் ஹான்களை அதிகப் படியாக குடியேற்றி வருகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைதியான வழியில் இஸ்லாமிய நெறிகளை பரப்பி வருவோரையும் தீவிரவாதிகள் என சீனா கூறுகிறது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய உலக சூழலை சீனா தோதாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஜின்ஜியாங் முஸ்லிம்கள் வன்முறை, தண்டம், சிறை மற்றும் சித்திரவதைக்கு மத்தி யில்தான் இறைவணக்கத்தில் ஈடுபடுகின்ற னர். திபெத்திலும் இதே நிலைதான் கிழக்குப் பகுதிகளான திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் சீன பகுதியோடு இணைத்துக் கட்ட அதிகப்படியான பொருட்செலவில் ஹானர்களை இரு பகுதிக்குமாக அனுப்பி வைக்கிறது அரசு.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களை கைது செய்கிறது. குர்ஆனின் வசனங்களையும் தணிக்கை செய்கிறது என்றெல்லாம் மனித உரிமை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை 114 பக்கங்களைக் கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று உரூம்கி நகரத்தின் பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. அன்றைய ஜும்மா தொழுகை தடுக்கப் பட்டது. முஸ் ம்கள் தங்கள் வீடுகளில் தொழுதுகொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டனர். உரூம்கியில் 20 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். உரூம்கியின் பெரிய கடை வீதி அருகே உள்ள பள்ளிவாச ல் வாரம்தோறும் 3000 முதல் 5000 பேர் தொழுகைக்கு வருவது வழக்கம்.
ஜிலி8 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சீன அதிபர் ஹீ ஜிண்டாவோ தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். தொலைக் காட்சியில் உரையாற்றிய அதிபர், பிரி வினைவாதிகள்தான் இந்தக் கலவரத் தைத் தூண்டினர் என்றார்.
தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தற்கா க மானதுதான். காரணம் இதற்கு முன்னரும் இதுபோன்ற வீகர் எழுச்சி ஏற்பட்டு பின்னர் அடக்கப்பட்டிருக்கிறது. சோசலிஸம் பற்றி அதிகம் பேசும் கம்யூனிஸ்டு கள் மனித உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் எதிரான அடக்குமுறைகளைக் கையாள் வது வியப்பான விஷயமல்ல. கொள்கை கோட்பாடு எதுவாக இருந்தாலும் அதிகார வர்க்கத்திற்கு ஒரு ஆபத்து ஏற்படும் என்றால் அடக்குமுறை ஏவப்படும். மேற்கு வங்காளத்திலும் இதுதான் நடக்கிறது. கிழக்கு சீனாவிலும் இதுதான் நடக்கிறது.
இரான் அதிபர் தேர்தல் குறித்து மக்கள் வாக்கெடுப்பு கோரி மதகுருமார் அழுத்தம்
இரானின் முன்னாள் அதிபரான மொஹமது கட்டமி உட்பட அங்கு சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மதகுருமார்களே இவ்வாறான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
நாட்டின் அதிபராக அஹமதி நிஜாட் அவர்கள் மீண்டும் அதிபராக தேர்தெடுக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மக்கள் அங்கு தேர்தல் நடைமுறைகளில் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று இந்த சீர்திருத்த மதகுருமார்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் நாட்டின் அதியுயர் மதத்தலைவரான அயோத்துல்லா அலிகமனேய் அவர்கள், இந்த மேட்டுக்குடி மக்கள் என்ன பேசுகிறோம், அல்லது என்ன பேசவில்லை என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இரானின் எதிரிகள் விரிக்கும் வலையில் வீழ்ந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
எயிட்ஸ் தடுப்பு மருந்தை தென்னாபிரிக்கா பரிசோதிக்கிறது
| எயிட்ஸ் வைரஸ் |
இந்த மாதத்தில் இந்த பரிசோதனைக்காக 36 தொண்டர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனைகள் ஏற்கனவே அமெரிக்காவில் ஆரம்பமாகிவிட்டன.
தென்னாப்பிரிக்காவில்தான் உலகின் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள்.
மருத்துவ பரிசோதனை வெற்றிபெற்றாலும், இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்குவர இன்னும் 10 வருடங்கள் பிடிக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு ஆட்களை அனுப்ப வேண்டும் என்று முன்னாள் விண்வெளி வீரர்கள் கோரியுள்ளனர்
அப்பலோ திட்டத்தின் சாராம்ச உணர்வை அமெரிக்கர்கள் மீண்டும் கைப்பற்றியாக வேண்டும் என்று நிலவில் இறுதியாக நடந்த விண்வெளிவீரரான இயூஜின் சேர்னன் அழைப்புவிடுத்துள்ளார். 1969 இல் நிலவில் மனிதன் முதலில் கால் பதித்த தினத்தை குறிக்கும் முகமான வைபவங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு ஆட்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். செவ்வாய்க்கான பயணத்திட்டத்துக்காக, நிலவில் தளங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். எதிர்கால விண்வெளி கண்டுபிடிப்புக்களுக்கு, நிலவுக்கான மீள் பயணங்கள் உதவும் என்று இரண்டாவதாக நிலவில் கால்பதித்த பஸ் ஆல்டரீன் கூறினார். அவரும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் விரைவில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கவுள்ளனர். | |||||
திங்கள், 20 ஜூலை, 2009
ஓட்டமாவடியில் பிரதேசசபை உறுப்பினரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
| பிரசுரித்த திகதி : 20 Jul 2009 |
|
பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தம் வழக்கு: இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தகவல்
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 80வது செயற்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கூடு நகரத்தில் கடந்த ஞாயிறு (ஜுலை 12ம்) தேதி நடைபெற்றது. வாரியத்தின் தலைவர் சைய்யது முஹம்மது ராபி ஹசன் நத்வி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்வும் பங்குக் கொண்டார்.
இக்கூட்டத்தில் பாபர் மஸ்ஜித் வழக்கு, லிபராஹான் குழு அறிக்கை, தாடி வைத்தவர்கள் அரசு பணியில் சேரும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள், ஒருபால் உறவு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
பாபர் மஸ்ஜித் வழக்கு நிலைக் குறித்து அந்த வழக்கில் வாரியத்தின் சார்பாக ஆஜராகும் வழக்குறைஞர் ஜப்பர்யாப் ஜீலானி விவரித்தார். பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது என்றும் முஸ்லிம்கள் தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களும் முடிவடைந்து விட்டனவென்றும் இனி எதிர்தரப்பு விவாதங்கள் முடிவடைய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பாபர் மஸ்ஜித் தொடர்பான சில ஆவணங்கள் தொலைந்து விட்டதினால் அது தீர்ப்பை பாதிக்காது என்றும் அதில் இரண்டு முக்கிய ஆவணங்கள் ஏற்கெனவே சமர்பிக்கப்பட்டு விட்டன என்றும் அவர் தெரிவித்தார். பாபர் மஸ்ஜித் இடிப்பு குறித்து சி.பி.ஐ. தொடர்ந்த குற்றவியல் வழக்கு ராய்பரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது என்றும் இந்த வழக்கை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்கிட மத்திய அரசு ஆவணச் செய்ய வேண்டுமென்றும் ஜபர்யாப் ஜீலானி குறிப்பிட்டார்.
லிபரஹான் அணையத்தின் அறிக்கை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மக்களுக்கு பகிரங்கப்படுத்துவது அரசின் கடமை எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஒருபால் உறவுகளுக்கு தண்டனை வழங்கும் குற்றவியல் சட்டத்தின் 377ம் பிரிவை நீக்க வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வாரியம் கடுமையாக கண்டித்தது. ஒருபால் உறவுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை உறுதிச் செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வாரிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பிற மதத் தலைவர்களையும் இப்பிரச்னையில் ஒன்றிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தாடி வைத்துள்ள காரணத்தினால் முப்படைகள் உள்பட சில அரசு துறைகளில் முஸ்லிம்களை பணியில் அமர்த்துவதில் உள்ள பாரபட்சத்தை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரை சந்திப்பது என்றும் தீர்மானிக்கப்ட்டது.
சிசு கொலை உள்ளிட்ட சமூக தீமைகள் குறித்து வாரியத்தின் சார்பாக தயாரிக்கப்பட்ட நூல்கள் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
வாரியத்தின் பொது அமர்வை லக்னோவில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து உலமா பெருமக்களும், முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டனர்.
பர்தா: பிரான்ஸ் அதிபரின் கருத்து! உலகம் கொந்தளிப்பு!!
-சர்ஜுன்
பர்தா என்ற மகளிரின் கவச உடை மீண்டும் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. ஆபாசத்தை வேரறுத்து மகளிரின் கண்ணியத்தைக் கட்டிக் காக்கும் பர்தா உடைக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி இல்லை என பிரெஞ்சு அதிபர் நிகலஸ் சர்க்கோஸி தெரிவித்த கருத்து உலக அளவில் பரபரப்பு தீயை பற்றவைத்தது.
2004ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் கல்விக் கூடங்களில் கூட ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்பதே பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய முஸ்லிம்களின் கடும் அதிருப்திக்கு பிரான்ஸ் இலக்கானது. ஐரோப்பியக் கண்டத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பிரான்ஸில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து தற்போது பர்தா அணியவும் அனுமதி யில்லை என்ற பிரெஞ்சு அதிபரின் திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் ஜனநாயக ஆர்வலர்களை வேதனைப்படுத் தியுள்ளது.
பொது இடங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின்படி கல்லூரிகள் மற்றும் பொதுவிழாக்களில் ஹிஜாப் அணிய முடியாது என்பதால் இதனை எதிர்த்து பிரான்ஸின் உரிமைக் காக்கும் போராளிகள் போராடி வரும் நிலையில் பர்தாவுக்கு அனுமதி இல்லை என்ற சர்க்கோஸியின் அறிவிப்பு ஆணவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகவும், இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகத்தின் வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி மார்க்க நிறுவனமான தாருல் உலூம் தேவ்பந்த், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்க்கோஸியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் அறிவிப்பினை வெளியிடத் தயாராக இருப்பதாக தாருல் உலூம் தேவ்பந்த்தின் ஃபத்வா அறிவிப்பினை வெளியிடும் தாருல் உஃபா வின் தலைவர் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவிக் கிறார். சர்க்கோஸியின் கருத்து மனித சமூகமே வெட்கப் பட வேண்டிய கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
புர்கா, நகாப், ஹிஜாப் இவையனைத்தும் பெண்களின் ஆடைகள் குறித்த அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். சர்க்கோஸி தனது சொந்த நாட்டின் சட்டத்தையும் மீறியிருக்கிறார் எனவும் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவித்திருக்கிறார்.
சர்க்கோஸி தான் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு எதிராக வும் கூட தனது கருத்தை தெரிவித்து தனது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டியுள்ளார் என்ற முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி, 'கன்னி மரியம் முக்காடிட்டதையும் அவர் என்றும் தெரிவித்தார்.
சர்க்கோஸியின் முட்டைகோசுத்தனமான கருத்து உலககெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அடிமைத்தனத்தின் சின்னமா? உளறுகிறாரா சர்க்கோஸி? என வெகுண்டெழுந்த அறிவுஜீவிகள், உலகெங்கும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான விவாத மன்றங்களை அமைத்து மூடத்தன கருத்துக்கு தெளிவான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்க்கோஸி வெறிக் கருத்து வெளியிட்ட சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஹுஸைன் ஒபாமாவால் பிரான்ஸின் உடை விஷயத்தில் பிற் போக்குத்தனத்தை செயல்படுத்துவதை கடுமையாக விமர்சித்து தனது கருத்தினை வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களின் உடைகளின் விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப் படுகின்றன. இது தேவையற்ற ஒன்று. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் சரமாரியாகத் தாக்கினார்.
பர்தா உடை விஷயத்தில் தற்போது கருத்து தெரிவிப்பது, தடை குறித்து பேசுவது எல்லாம் இப்போது உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படும் விஷயமாகி விட்டது.
பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியத் தடை இல்லை என்ற சுதந்திர உணர்ச்சிக்கு எதிரானதாக பிரெஞ்சு அதிபரின் கருத்து அமைந் துள்ளது என உலகெங்கிலும் உள்ள நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரம் (கண்க்ஷங்ழ்ற்ஹ்), சமத்துவம் (ஊவ்ன்ஹப்ண்ற்ஹ்), சகோதரத்துவம் (எங்ழ்ற்ஹய்ண்ற்ஹ்) என்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியாகவே சர்க்கோஸின் கருத்து அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
பர்தா: பிரான்ஸ் அதிபரின் கருத்து! உலகம் கொந்தளிப்பு!!
-சர்ஜுன்
பர்தா என்ற மகளிரின் கவச உடை மீண்டும் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. ஆபாசத்தை வேரறுத்து மகளிரின் கண்ணியத்தைக் கட்டிக் காக்கும் பர்தா உடைக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி இல்லை என பிரெஞ்சு அதிபர் நிகலஸ் சர்க்கோஸி தெரிவித்த கருத்து உலக அளவில் பரபரப்பு தீயை பற்றவைத்தது.
2004ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் கல்விக் கூடங்களில் கூட ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்பதே பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய முஸ்லிம்களின் கடும் அதிருப்திக்கு பிரான்ஸ் இலக்கானது. ஐரோப்பியக் கண்டத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பிரான்ஸில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து தற்போது பர்தா அணியவும் அனுமதி யில்லை என்ற பிரெஞ்சு அதிபரின் திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் ஜனநாயக ஆர்வலர்களை வேதனைப்படுத் தியுள்ளது.
பொது இடங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின்படி கல்லூரிகள் மற்றும் பொதுவிழாக்களில் ஹிஜாப் அணிய முடியாது என்பதால் இதனை எதிர்த்து பிரான்ஸின் உரிமைக் காக்கும் போராளிகள் போராடி வரும் நிலையில் பர்தாவுக்கு அனுமதி இல்லை என்ற சர்க்கோஸியின் அறிவிப்பு ஆணவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகவும், இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகத்தின் வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி மார்க்க நிறுவனமான தாருல் உலூம் தேவ்பந்த், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்க்கோஸியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் அறிவிப்பினை வெளியிடத் தயாராக இருப்பதாக தாருல் உலூம் தேவ்பந்த்தின் ஃபத்வா அறிவிப்பினை வெளியிடும் தாருல் உஃபா வின் தலைவர் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவிக் கிறார். சர்க்கோஸியின் கருத்து மனித சமூகமே வெட்கப் பட வேண்டிய கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
புர்கா, நகாப், ஹிஜாப் இவையனைத்தும் பெண்களின் ஆடைகள் குறித்த அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். சர்க்கோஸி தனது சொந்த நாட்டின் சட்டத்தையும் மீறியிருக்கிறார் எனவும் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவித்திருக்கிறார்.
சர்க்கோஸி தான் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு எதிராக வும் கூட தனது கருத்தை தெரிவித்து தனது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டியுள்ளார் என்ற முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி, 'கன்னி மரியம் முக்காடிட்டதையும் அவர் என்றும் தெரிவித்தார்.
சர்க்கோஸியின் முட்டைகோசுத்தனமான கருத்து உலககெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அடிமைத்தனத்தின் சின்னமா? உளறுகிறாரா சர்க்கோஸி? என வெகுண்டெழுந்த அறிவுஜீவிகள், உலகெங்கும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான விவாத மன்றங்களை அமைத்து மூடத்தன கருத்துக்கு தெளிவான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்க்கோஸி வெறிக் கருத்து வெளியிட்ட சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஹுஸைன் ஒபாமாவால் பிரான்ஸின் உடை விஷயத்தில் பிற் போக்குத்தனத்தை செயல்படுத்துவதை கடுமையாக விமர்சித்து தனது கருத்தினை வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களின் உடைகளின் விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப் படுகின்றன. இது தேவையற்ற ஒன்று. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் சரமாரியாகத் தாக்கினார்.
பர்தா உடை விஷயத்தில் தற்போது கருத்து தெரிவிப்பது, தடை குறித்து பேசுவது எல்லாம் இப்போது உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படும் விஷயமாகி விட்டது.
பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியத் தடை இல்லை என்ற சுதந்திர உணர்ச்சிக்கு எதிரானதாக பிரெஞ்சு அதிபரின் கருத்து அமைந் துள்ளது என உலகெங்கிலும் உள்ள நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரம் (கண்க்ஷங்ழ்ற்ஹ்), சமத்துவம் (ஊவ்ன்ஹப்ண்ற்ஹ்), சகோதரத்துவம் (எங்ழ்ற்ஹய்ண்ற்ஹ்) என்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியாகவே சர்க்கோஸின் கருத்து அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
