சனி, 18 செப்டம்பர், 2010

'இயக்க வெறி'


ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான அமல்களில் ஒன்றாக இஃதிகாப் கருதப்படுகிறது.

நமது நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதும் ஏராளமானோர் இவ் அமலில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வதும் வழமை.

இந்த வருடம் ரமழானின் இறுதிப் பத்தில் கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாப் இருந்த சில சகோதரர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் கவலைக்குரியது மட்டுமல்ல நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாகும்.

குறித்த பள்ளிவாசலில் இஸ்லாமிய இயக்கம் ஒன்றைச் சேர்ந்த சுமார் 15 சகோதரர்கள் இம் முறை இஃதிகாப் அமலில் ஈடுபட்டிருந்தனர்.
சரியாக நோன்பு 28 அன்று நண்பகல் இப் பள்ளிவாசலுக்கு வந்த இன்னுமொரு இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த சிலர் இஃதிகாப் இருந்த சகோதரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரியதுடன் அவர்களைத் தாக்குவதற்கும் முற்பட்டுள்ளனர்.

இவ் விவகாரம் பொலிஸ் நிலையம் வரை செல்ல பிரச்சினையைப் பெரிதுபடுத்த விரும்பாத இஃதிகாப் இருந்த சகோதரர்கள் அங்கிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். ஆசையோடு செய்த அமலை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற கவலை இன்றும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

"இயக்க வெறி' பிடித்து அலையும் இவர்கள் தமது இயக்கத்தை வளர்க்கிறார்களோ இல்லையோ இஸ்லாத்தை அழிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

16.09.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக