புதன், 14 ஏப்ரல், 2010

குழந்தைகளும் விபத்தும் 2

குழந்தைகளும் விபத்தும் 2 

நீரில் மூழ்குதல், புகை விஷவாயுக்கள் உடலுட் செல்லுதல், தொண்டையில் ஏதும் சிக்கிக் கொள்ளுதல், மின்சாரம் தாக்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் சுவாசம் தடைப்பட இடமுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் செயற்கைச் சுவாசம் மூலம் நோயாளியின் உயிரைக்காப்பாற்ற முடியும்.
முகம் மேலே இருக்குமாறு நோயாளியை நிமிர்த்திப் படுக்கவைக்க வேண்டும். வாய்க்குள் ஏதாவது சிக்குண்டு காணப்படின் உரனே வாயை விரல்களால் துப்பரவு செய்யவேண்டும். ஒரு கையை நோயாளியின் கழுத்துக்குக்கீழே வைத்து சிறிது நிமிர்த்தவும். அதாவது உயர்த்திவைக்கவும். மற்றக் கையை தலை உச்சியில் வைத்து முடிந்தளவு தலையை பின்னோக்கித் தள்ளவும்.
தலை மேலும் பின்னால் போகுமாறு நாடியைப் பிடித்து உயர்த்தவும். நோயாளியின் வாயை இயன்றளவு திறக்கவும். நோயாளியின் வாயிலும் மூக்கிலும் முழுமையாக உங்கள் வாயை வைத்து மூடவும். பின்னர் நோயாளியின் வாயுள் ஊதி மூச்சுக்குழாய்க்குள் காற்று நிரம்புமாறு செய்யவும். நெஞ்சுப்பகுதி விரிவடைகிறதா என்பதனை அவதானிப்பதான் மூலம் இதனை உறுதிசெய்யலாம். ஊதுவதை நிறுத்தி காற்று வெளியேறும் சப்தத்தை காது கொடுத்துக் கேட்கவும். மீண்டும் ஊதவும். நோயாளியின் வாயிலிருந்து காற்று வெளியேறாதிருந்தால் அவரின் தலை, கடைவாய் ஆகியன உரியமுறையில் இருக்கின்றனவா என்பதை கவனிக்கவும். நாக்கு தொண்டையை மறைத்துக் கொண்டிருக்கின்றதா என்பதையும் அவதானிக்கவும். நோயாளியின் தலை சிறிது பனிவாக இருக்கும் வகையில் ஒருபுறமாகத் திருப்பி இரு தோள்களுக்குமிடையே உள்ள பகுதியில் மெதுவாகத்தட்டவும். மீண்டும் ஊதவும். மூன்று விநாடிகளுக்கு ஒருமுறை ஓர் அளவான முறையில் (உரமாக ஊதாமல்) இவ்வாறு ஊதவும். நோயாளி மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும் வரை இவ்வாறு ஊதிக்கொண்டிருக்கவும். செயற்கைச் சுவாசம் வழங்குவதை அதுபற்றி நன்கு தெரிந்த ஒருவரே மேற்கொள்ள வேண்டும்.
சிறிதளவு இரத்தம் வந்த காயம், சிராய்ப்புகளால் ஏற்பட்ட காயம் என்பவற்றை சுத்தமான நீரில் நண்கு கழுவ வேண்டும். சவர்க்காரமிட்டுக் கழுவுவது மிகவும் நல்லது. கழுவியபின்னர் சுத்தமான ஒரு துணியால் காயத்தை மூடவும். விஷஜந்துக்கள், பாம்பு என்பன கடித்த கடிவாயையும் இவ்வாறு சவர்க்காரமிட்டுக் கழுவித் துப்பரவு செய்வது மிகவும் நல்லது. காயத்தில் மருந்து, எண்ணெய் போன்ற எதனையும் போடாது நோயாளியை உடன் வைத்தியரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
காயத்திலிருந்து இரத்தம் கொட்டும் பட்சத்தில் காயம்பட்ட இடம் உயரமாக அதாவது மேல்நோக்கி இருக்குமாறு வைக்கவும்.
இரத்தம் வழிவது நிற்கும் வரை சுத்தமான துணியால் அல்லது கையால் காயத்தை அழுத்திப்பிடிக்கவும். கால்கைகளில் பட்ட காயத்திலிருந்து இவ்வாறு இரத்தம் வெளியேறினால் துணித்துண்டொன்றினால் காயம்பட்ட இடத்திற்கு மேல்பகுதியில் ஓரளவு இறுக்கிக் கட்டிவிடவும். இதனை 10 – 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இளக்கிக் கொள்ளவும்.
கைகால்களில் எலும்புகள் முறிந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பின் பாதிக்கப்பட கை அல்லது கால் அசையாவண்ணம் ஒரு தடி அல்லது அடிமட்டை போன்ற ஒன்றை வைத்துக்கட்டிவிடவும். தோலைக்கிழித்துக் கொண்டு எலும்பு ஏதும் உடைந்து வெளியே வந்திருந்தால் அதனை உள்ளே தள்ளிவிடவும். பிரயத்தனம் செய்தல் கூடாது. அதேபோன்று உடைந்த எழும்புகளை சரிசெய்ய முனையவும் கூடாது. பொருத்தமான வைத்தியர் ஒருவரிடம் காயப்பட்டவரை உடன் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிகாயமாக இருந்தால் காயம்பட்ட பகுதிக்கு இயன்றளவு நேரம் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவச் செல்ல இடமளிக்கவும். அல்லது மெதுவாக கழுவி விடவும். காயத்தின் வெப்பத்தைக் குறைக்க அது உதவும். காயத்துக்கு எண்ணெயோ மருந்தோ அல்லது வேறு எதனையும் பூசவேண்டாம். காயமுற்ற குழந்தையை மிகவிரைவாக எடுத்துச் செல்ல வேண்டும்.
கண்ணுக்குள்ளே ஏதும் விழுந்துவிட்டால் கண்ணைக் கசக்கக்கூடாது. முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து அதனுள் கண்ணை விழிப்பதன் மூலம் விழுந்த பொருளை அகற்ற முயலவும். இவ்வாறு செய்யும் போது கண்ணிமையை வேண்டுமானால் உயர்த்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் மெல்லிய ஒரு துணியை எடுத்து அதன் நுனியைச் சுத்தமான தண்ணீரில் நனைத்து அதன் மூலம் கண்ணுக்குள் விழுந்த பொருளை எடுக்க முயற்சி செய்யவும். கண்ணின் கருவிழிப்பகுதிக்குள் சென்றுள்ள எவற்றையும் விரல்களால் எடுக்க முனையவேண்டும். உடனே மருத்துவ உதவியினை நாடவேண்டும்.
கொதி நீராவி, இரசாயனப் பொருட்கள், நச்சுத்திரவங்கள் ஏதேனும் கண்ணுக்குள் சென்றுவிட்டால் சிறிய ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து கண்ணுக்குள் விடவும். சிறு ரப்பர் குழாய் (இங்க் பிலர்) மூலமாகவும் இதனைச் செய்யலாம். சுமார் 15 நிமிடம் நேரம் இவ்வாறு கண்ணை நன்கு கழுவவும். கழுவும் போது பிள்ளையின் கண் இமைக்காது நன்கு திறந்துவைத்துக் கொள்ள இன்னொருவரின் உதவியைப் பெற்றுக் கொளளவும். மருத்துவ ஆலேசனை பெற்றுக் கொள்ளும் வரை கண்ணுக்குள் எவற்றையும் போட வேண்டாம்.
தொண்டையில் ஏதும் சிக்கிக் கொண்டால் குழந்தையை இருமிக்கக்குமாறு செய்ய வேண்டும். சிறுவயதுக் குழந்தையாயின் தலை கீழே இருக்கக்கூடியதாக அதாவது தலை கீழாய் பிடித்துக் கொண்டு தோள்பட்டைகள் இரண்டுக்குமிடையே முதுகில் தட்டவும். வளர்ந்த பிள்ளையாயின் தலை பனிவாக இருக்கும் வகையில்வைத்து அல்லது நீட்டிப் படுக்கவைத்து தோள்களுக்கிடையே முதுகில் சிறிது பலமாகத்தட்டவும். இல்லாவிட்டால் வயிற்றை மேல்நோக்கி அமுக்கவும். தொண்டைக்குள் விரலைவிட்டு சிக்குண்ட பொருளை எடுக்க முனையவேண்டாம்.
காது அல்லது மூக்கினுள் ஏதாவது சிக்குண்டால் அதனை எடுக்க முயலவேண்டாம். உடனே வைத்தியர் ஒருவரது உதவியை நாடவும். அத்தகைய பொருட்களை உரியமுறையில் எடுக்காது போனால் அவை மேலும் உள்ளே சென்று பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம்.
பாம்பு கடித்தால் நஞ்சு உட்செல்வதைத் தாமதப்படுத்திக் கொள்வதற்காக கடிவாய்ப்பகுதி அசையாது இருக்கும் வகையில் சிறுபலகைத்துண்டு போன்ற ஒன்றை வைத்துக் கட்டவும். கடிவாய்ப்பகுதி வீங்கக்கூடாது. கையில் மோதிரம், வளையல் என்பன அணிந்திருந்தால் அவற்றை அகற்றுங்கள். காயப்பகுதியில் காணப்படக்கூடிய விஷத்தை அகற்றுவதற்கு அப்பகுதியை சவர்க்காரமிட்டு நன்கு கழுவவும்.
கடியுண்ட இடத்தை வெட்டி அல்லது கீறி இரத்தத்தை வெளியேற்ற முயலவேண்டாம். அந்த இடத்தில் வாயை வைத்து விஷத்தை உரிஞ்ச முனையவும் வேண்டாம். வேதனை காணப்படின் பரசிட்டமோல் வில்லைகளை நோயாளிக்குக் கொடுக்கவும். அஸ்பரின் மருந்துகள் கொடுக்கக்கூடாது. நோயாளியை உடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும். கடித்த பாம்பு எவ்வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளுதல் மிகமுக்கியமாகும். கடித்த பாம்பு அருகில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் சற்று மயக்கத்துடன் காணப்படும். ஏனெனில் பாம்பின் இனத்தைப் பொருத்தே சிகிச்சை அமையும்.
பிழையான மருந்துகள், இரசாயணப்பொருட்கள், நஞ்சுமருந்துகள் என்பவற்றைத் தவறுதலாக உட்கொண்டுவிட்டால் குடித்தவர் வாந்தி எடுப்பின் ஒருகிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும். இது வாந்தி எடுப்பதை இலகுவாக்கும். வாந்தி எடுக்காவிட்டால் தொண்டைக்குள் விரலைவிட்டு வாந்தியை ஏற்படுத்தவும். இதனை மிகக்கவனமாக செய்ய வேண்டும். வாந்தி எடுத்தபின்னர் முடிந்தளவு தண்ணீரைக் குடிக்கக் கொடுக்கவும்.
ஆனால் மண்ணென்ணெய், பெற்றோல், அசிட்டிக் அசிட், வினாகிரி போன்ற அமிலங்களையோ, அமோனியா போன்ற காரவகைகளை குடித்திருந்தால் வாந்தி எடுக்கச்செய்யக் கூடாது.
மயக்கம், நினைவிழந்து போதல், வலிப்பு போன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் வாந்தியை ஏற்படுத்தக் கூடாது. இத்தகைய சந்தர்ப்பங்களில் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும் கூடாது. ஏதும் விஷம் அல்லது இரசாயணப்பொருட்கள் உடம்பில் பட்டுவிட்டால் உடுத்திருக்கும் துணிவகைகளை அகற்றிவிடவும். பட்ட இடத்தை சவர்க்காரம் போட்டு நண்கு கழுவவும். எண்ணெய், மருந்துவகைகள் எவற்றையும் வைத்திய ஆலோசனை இன்றி பூசக்கூடாது. சிகிச்சைக்காக வைத்தியரிடம் கொண்டு செல்லும்போது உடம்பில்பட்ட மருந்தின் போத்தல் அல்லது லேபல் என்பவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். பட்டது இன்ன இரசாயனப் பொருள் என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.
மேலே கூறப்பட்டவை யாவும் முதலுதவியாகும். விபத்தின் சிக்கிய ஒரு குழந்தையின் உடல்நிலை எவ்வளவுதூரம் அபாயகரமானது என்பதை ஒரு வைத்தியசாலைதான் தீர்மானிக்க முடியும். எனவே விபத்திற் சிக்கிய குழந்தையை உடனடியாக வைத்தியர் ஒருவரிடம் கொண்டுசெல்வது அவசியமாகும்.
(தொடரும்)
http://www.idrees.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக