செவ்வாய், 21 ஜூலை, 2009

நாளை புதன்கிழமை 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம்

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் பூமியின் சில பகுதிகளில் சந்திரன் மறைப்பதால் ஏற்படும் நிழல் காரணமாக பகலிலேயே இருள் உண்டாகும்.
நாளை சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்தக் கிரகணம் 5 மணி 14 நிமிடங்களுக்கு நீடிக்கப்போகிறது. இலங்கையில் காலை 6.21 மணிக்கு உச்சகட்டமாக இருக்கும்.

அப்போது சூரியனின் 40 வீதத்தை சந்திரன் மறைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். இதுவே இந்த 21 நூற்றாண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணமாக இருக்கும்.

அதிகாலை 05.28 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், காலை 10 மணி 42 நிமிடங்கள் வரை நீடிக்கும். நாளை காலை நிகழவிருக்கும் சூரியகிரகணத்தை இலங்கை, இந்தியா, நேபால், பங்ளாதேஷ், பூட்டான், மியன்மார், சீனா உட்பட பல நாடுகளில் காணக்கூடியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக